கோடை சுற்றுலா : உதகை தாவரவியல் பூங்காவின் சிறப்புகள்

கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள்.

நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள். 



சரி..! அப்படி, ஊட்டியில் செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம். அந்த பகுதியின் சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறது இந்த வாராந்திர கட்டுரை.

 

உதகை தாவரவியல் பூங்கா

உதகை அரசு தாவரவியல் பூங்கா நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த பூங்கா கடந்த 1897-ம் ஆண்டு மார்குயுஸ் டிவ்டேல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 22 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த தாவரங்கள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட வகைகளில் வெளி நாட்டு மரங்களும், அலங்கார செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கண்களைக் கவரும் வகையில் பச்சை பசேல் என்ற புல்வெளி உள்ளது. 



இந்த புல்வெளியின் ஓரத்தில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இது மட்டுமின்றி கல்லாகி போன மரம், இத்தாலியன் பூங்கா, புல்வெளி, குளங்கள், இந்திய வரைபடம், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், விதை கூடம் மற்றும் விற்பனை நிலையமும் உள்ளது.சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல், தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பூங்கா பயனுள்ள இடமாக திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 



அதன்படி, இந்த ஆண்டும் வரும் மே மாதம் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. பூங்காவிற்குள் செல்ல கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, புகைப் பட கருவி (ஸ்டில் கேமிரா) பயன்பாட்டிற்கு ரூ.50, ஒளிபடகருவி (வீடியோ கேமிரா) ரூ.100 என்று வசூலிக்கப்படுகிறது.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கோடை சீசனின் போது அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களை இணைக்கும் சுற்று பேருந்துகளும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...