ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர். கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கோத்தகிரியில் வீட்டுப் பொருட்களை வாங்கி முடித்து விட்டு பேருந்து நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த பெண் மீது எதிர்பாராத விதமாக கை பட்டதாகத் தெரிகிறது.



இதை தவறாக எடுத்துக்கொண்ட அவர் திருடன், திருடன், என்று கூச்சலிடவே, அங்கு இருந்த போலீசார் முருகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு சரமாரியாக முருகனைத் தாக்கியதாக தெரிகிறது. இரவு வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட முருகன் இரவு சுமார் 9 .30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகன் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில் எப்படி இவரை அடிக்கலாம்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் சரியான பதில் கூறாமல் முருகனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து, முருகனின் உறவினர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். 

விசாரணை என்கிற பெயரில் முருகனைத் தாக்கிய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முருகனை அழைத்து விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தை பற்றி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறுகையில், "காவலர்களால் தாக்கப்பட்டார் என்பது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...