சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி த.பெ.தி.க., வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.ராமகிருட்டிணன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தொடர்ந்து சாதி, மத வேறுபாடுகளையும் விஷ கருத்துகளையும் மாணவர்களிடையே விதைக்கின்ற பாடத்திட்டங்களையும், கேள்விகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி தாளில் வர்ணாசரமத்தில் இழிவான சாதி, பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் என வினா எழுப்பப்பட்டு இதில் இழிவானவர்கள் யார் என கேட்கப்பட்டிருப்பது ஜாதி வேறுபாட்டை குழந்தைகளின் மனதில் புகுத்தும் விதமாக கேட்கப்பட்டு இருப்பது மாணவர் பருவத்திலேயே ஜாதிய வன்கொடுமையைத் தூண்டும் விதமாக அமைத்திட வழிவகுத்துவிடும். 

கடந்த காலங்களிலும் இதுபோன்று இழிவாக எழுதியுள்ளது. அதனை எதிர்த்து அந்த சமூகத்தினர் போராடி வருகின்றனர். அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒரு படத்தை வெளியிட்டு அதறக்கான காரணத்தையும் விளக்கி உள்ளனர். அதில், அம்பேத்கர் எழுதிய சட்டம் தவறாக இருப்பதாகவும், அதற்காக நேரு சவுக்கால் அடிப்பது போல படத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது. இவை அனைத்தும் தலைவர்களையும், சமூகத்தையும் இழிவுப்படுத்தி நாட்டை கூறுபோட மத்தியில் ஆளும் பா.ஜ.க. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வர்ணாசரம திட்ட கொள்கைகளை புகுத்தும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விஷ கருத்துகள் பரப்புகின்ற பள்ளிகளை மூட வேண்டும். புதிதாக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...