அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: புதிய அமைப்பைத் தொடங்கினார் டி.டி.வி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தொடங்கியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தொடங்கியுள்ளார்.

மதுரை மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் டி.டி.வி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்ட திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது முழு உருவ பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. 



அந்த திடலுக்கு காலை 10 மணி அளவில் டி.டி.வி.தினகரன் கார் மூலம் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

வரவேற்புக்குப் பின்னர் மேடைக்கு வந்த டி.டி.வி.தினகரன் புதிய அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது அமைப்புக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

தொடர்ந்து, கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்திய அவர், மேடை முன்பு அமைக்கப் பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...