வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

இடுவம்பாளையம் பகுதியில் உள்ள காமாட்சி நகர் பகுதியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல நேற்று பனியன் நிறுவனத்திற்கு சென்றுவிட்ட நிலையில், நதியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், பூபாலனின் சகோதரர் ஜீவா நேற்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்த, நதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, திருப்பூர் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் நேற்று மாலை 6 மணி வரை அக்கம்பக்கத்தினரோடு நதியா பேசிக் கொண்டிருந்ததாகவும், அதற்குப் பின்னரே அவர் வீட்டிற்குள் சென்றதாகவும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கொலை செய்த மர்ம நபர்கள், சடலமாக கிடந்த நதியாவின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்துள்ளது. எனவே, இந்தக் கொலை நகைக்காக செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...