அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற 7 மடங்கு நிதி ஒதுக்கீடு

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும், நடப்பாண்டில் 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும், நடப்பாண்டில் 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

பவானி ஆற்றிலிருந்து 2,000 கனஅடி உபரி நீரை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பி, நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகியவற்றிற்காக கொண்டுவரப்பட்டது அத்திக்கடவு - அவினாசி திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழக அரசிடம் 1957ஆம் ஆண்டு முதல்முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

61 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். 

இதன் விளைவாக, அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என கடந்த 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது அப்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தை ரூ. 1,862 கோடி செலவில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறினார். 

இதையடுத்து, கடந்த 2017-18-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட்டில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதைய நிதியாண்டில் (2018-2019) தமிழக பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 1,789 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் நீர்பாசனத்திற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், கடந்த ஆண்டை விட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், தமிழக அரசின் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் முழுமையடையாதது வருத்தம் அளிக்கக் கூடியதாகவே உள்ளது. எனவே, தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றி தங்களது வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்பது கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் கோரிக்கையாக உள்ளது. 

அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேறும் போது இப்பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும், 1.30 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...