தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை வரவேற்பு

2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு கோவையைச் சேர்ந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை மற்றும் இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை : 2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு கோவையைச் சேர்ந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை மற்றும் இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தமிழக சட்டப்பேரவையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில், அத்திக்கடவு- அவினாசி குடிநீர் திட்டம், உயர்கல்வித்துறை, போக்குவரத்து, அம்ருத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபையின் தலைவர் வனிதா மோகன், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிதிப்பற்றாக்குறை 4.12 சதவீதத்தில் இருந்து 2.82 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில், அரசுக்கு வரும் வருவாயிக்கும் அதிகமாக ரூ. 17,490 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல, தமிழக அரசின் பட்ஜெட்டை இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலமும் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அதன் தலைவர் எம். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 08.03 சதவீதமாக உள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டின் மூலம், 2018-19-ம் ஆண்டில் 9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

இதேபோல, இந்திய தொழில் கூட்டமைப்பின் துணை தலைவர் ஆர். வரதராஜன் கூறுகையில், தமிழக அரசு தனது பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றின் அடிப்படை விலை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், பருப்பு வகைகளிலும் அடிப்படை விலை நியமிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் ஓரளவிற்கு லாபம் பார்க்க முடியும். இவ்வாறு கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...