விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை தாக்கிய திருப்பூர் மக்கள்

திருப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பெருமாநல்லூர், ஊத்துகுளி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நேற்று ஊத்துகுளி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் ஒருவர் சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற நைஜீரியர்கள் முன்னே சென்றவர் மீது உரசியுள்ளார். இதில் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 



இதனைக் கண்ட அப்பகுதியினர் நைஜீரியர்களை சரமாரியாக தாக்கியதோடு, அவர்கள் வைத்திருந்த செல்போனையும் உடைத்தெறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துகுளி போலீசார் நைஜிரியர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு, பாதிக்கப்பட்டவரிடமும் விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

நைஜீரியர்களை பொது மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...