எடை குறைத்து வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்: முறையிடாத மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கேட்க முடியாத சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டியில் நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கேட்க முடியாத சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனைகட்டி பகுதியில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்களுக்கு நடமாடும் நியாய விலைக்கடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், அது செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூமனூர், சேம்புக்கரை, ஆரநாட்டுக்காடு, தூவைப்பதி, கொண்டனூர் புதூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள், அரசு கொடுக்கும் இலவச அரிசியை பணம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். சேம்புக்கரைக்கு ஒரு கிலோ அரிசிக்கு இரண்டு ரூபாய் வாகன செலவிற்கு கொடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 



ஆலமரமேடு பகுதியிலுள்ள நியாய விலைக்கடை வாரத்திற்கு இருநாட்கள் செயல்பட வேண்டும். ஆனால், பொருட்கள் இல்லாமல் மூடியே கிடப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இங்குள்ள நியாய விலைக்கடையில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆலமரமேடு மற்றும் ஆனைகட்டி பொதுவிநியோகக் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியை வேறொரு எடைபோடும் இயந்திரத்தில் எடை போட்டால் ஒருகிலோ முதல் இரண்டு கிலோ வரை குறைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் எங்களுக்கு தெரிந்தும், நாங்கள் எப்படி கேட்க முடியும் என அப்பாவிகளாக நம்மிடமே கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், சர்க்கரைக்கு ஒரு கிலோவிற்கு 100 கிராம் வரை குறைத்து வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கக்கூடிய இலவச அரிசியைக் கூட அளவை குறைத்து கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. டன் கணக்கான ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அரசு வட்டாட்சியர் தலைமையில் பறக்கும்படை அமைத்தால் மட்டும் போதாது என்றும், கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக நியாய விலைக்கடையில் பணிபுரிபவர்கள் பதிவு செய்வதால், தொலைபேசிகளில் வரும் குறுந்தகவல்கள் குறித்து நிறையப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இத்தனை முறைகேடுகளையும் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...