செயற்கை நூலிழை உற்பத்தியில் கவனம் செலுத்த மத்திய ஜவுளித்துறை ஆணையர் அறிவுறுத்தல்

சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

கோவை : சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின் மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- உள்நாட்டு உற்பத்தி 110 பில்லியன் டாலர், சர்வதேச உற்பத்தி 40 பில்லியன் டாலர் என ஏற்றுமதியில் 150 பில்லியன் டாலர் அளவிற்கு ஜவுளித்துறை வரத்தகத்தில் இந்தியா பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், 2025-க்குள் 300 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் 70% செயற்கை நூல், 30% பருத்தி தேவை என்ற நிலையில், இந்தியாவில் 30% பருத்தி, 70% செயற்கை நூல் என்று முற்றிலுமாக மாறுபட்டவையாக உள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியா போட்டியிடுவதற்கு சிக்கலாக உள்ளது. எனவே, தற்போது இந்தியாவில் பருத்தி 6.5 பில்லியன் கிலோ என்ற அளவிலும், செயற்கை நூல் 2.5 பில்லியன் கிலோவாக இருக்கும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய பருத்தி அரசனாக பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஜவுளித்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

புல்லட் ப்ரூப் போன்ற தொழில்நுட்ப ரீதியான ஆடைகளுக்கு எதிர்கால தேவை அதிகமாக இருப்பதால் அது சார்ந்த உடைகளை தயாரிப்பதில் ஜவுளித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசம் நாட்டிலிருந்து தரமற்ற ஆடைகள் இந்தியாவில் நுழைவதை தடுக்க ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் தமிழகத்தில் செயற்கை சார்ந்த ஆடைகளை அதிகரிக்க உதவும். இவ்வாறு கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...