என்.ஐ.ஏ. பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது - மனித உரிமைகள் அமைப்பு

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை செய்தது [பழிவாங்கும் நோக்குடையது என்று மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை செய்தது [பழிவாங்கும் நோக்குடையது என்று மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 



விசாரணையை முடிந்த பிறகும் சசிக்குமார் கொலை வழக்கில் கைதான நான்கு பேரின் வீடுகளில் சோதனை நடத்துவது சட்டவிரோத செயல். தேசிய பாதுகாப்பு முகமையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதால், அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். வழக்கு போடப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கைப் பதிவு செய்வதும் சட்ட விரோதமானது. 

தேசிய பாதுகாப்பு முகமை இந்த வழக்கை எடுத்து விசாரிக்க முகாந்திரமே கிடையாது. பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., போன்ற சில அமைப்புகளை தடை செய்ய தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற உள் நோக்கங்களின் அடிப்படையில் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்து விசாரித்து வந்ததது. சி.பி.சி.ஐ.டி விசாரணையை முடித்த பின்னர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) அதில் சேர்க்கப்பட்டது ஏற்புடையதல்ல. எச்.ராஜாவின் பேச்சு இறையாண்மைக்கு எதிராக தெரியவில்லையா? அவர் மீது ஏன் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு ஏன் வழக்கு பதியவில்லை?" என்றார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...