மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் பலி: விளையாடும் போது நேர்ந்த சோகம்

கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் ஆர்.ஆர்.தர்ஷன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 110 குடியிருப்புகள் உள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் நரேன் கார்த்திகேயன். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷால். 

இந்த இரு பள்ளி மாணவர்களும் நேற்று இரவு குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுமார் 8 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் சென்றது. அதனை எடுக்கச் சென்ற விஷால் தவறுதலாக அங்கிருந்த மின் கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கியது. விஷாலின் அலறல் சத்தத்தை கேட்ட நரேன், அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து, அங்கு சென்ற குடியிருப்பு வளாக காவலாளி மின்சாரத்தை துண்டித்தார். மேலும், இது குறித்து இருவர் வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீட்டு பீளமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 



அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நரேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் விஷாலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தில் மின்கசிவு இருந்ததும் கம்பத்தை சிறுவர்கள் தெரியாமல் பிடித்த போது மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

அக்கம்பத்தில் மின் கம்பத்தில் மின் கசிவு இருப்பதாக முன்னதாகவே குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அக்குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டிய நிலையில், வளாக உரிமையாளரான வர்ணாபூபதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...