மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது ஆந்திர அரசு

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின் போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு தலைநகரான ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்குச் சென்றுவிட்டது.

இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகராக அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தபோது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அது கைவிடப்பட்டது.

மக்களவையில் தற்போது 539 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு மட்டும் 274 எம்.பி.க்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களை விட அதிகமாகும். மேலும், சில கூட்டணிக் கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்.

எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்பு உள்ளது. எனினும், தொடக்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க., இடைத்தேர்தல் தோல்விகளால் ஒரு சில எம்.பி.க்களை இழந்தது. இப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...