குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி


கோவை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அப்போது பேசிய கே.சி.பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுகவினர் நாடாளுமன்றத்தில் தினமும் ஆர்ப்பாட்டம் செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்தார்.



மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தருமென்ற நம்பிக்கை இல்லை என கூறினார். அதிமுக விதிப்படி பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையை மாற்ற பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும், அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஒபிஎஸ், இபிஎஸ் ஏமாற்றி கொண்டிருக்கின்றனர் என கூறியவர்.

சசிகலாவை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இருந்து நீக்க வேண்டுமென்பதே தர்மயுத்ததின் நோக்கம் என்ற ஒ.பன்னீர்செல்வம், ஏன் இதுவரை சசிகலா நீக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் எனவும், ஒபிஎஸ்-யை நம்பி இலட்சக்கணக்கான தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கே.சி.பழனிசாமி கூறினார்.

இதன் பின்னர் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி பேசுகையில் எந்த புகாரும் குற்றச்சாட்டும் தன் மீது இல்லை எனவும், அண்ணா தொழிற்சங்கத்தில் செய்த செலவுகளுக்கு கணக்கு உள்ளது எனவும் கூறிய சின்னசாமி, 10 இலட்ச ரூபாய் கையாடல் என்பது அபாண்டமான புகார் என தெரிவித்தார். மேலும் மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்தவர். டிடிவி தினகரனுடன் அணிக்கு செல்வேன் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...