உலக சிட்டுக் குருவிகள் தினம் : மீண்டும் கேட்கட்டும் 'கீச்' சத்தம்..!

உணவுச் சங்கிலியை முறையாக இயங்கச் செய்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் சமீப காலமாக காணாமல் போய்விட்டன. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர் வீச்சுக்கள் தான் சிட்டுக் குருவி இனத்தை அளித்து வருகின்றது என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.


கோவை: உணவுச் சங்கிலியை முறையாக இயங்கச் செய்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் சமீப காலமாக காணாமல் போய்விட்டன. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர் வீச்சுக்கள் தான் சிட்டுக் குருவி இனத்தை அளித்து வருகின்றது என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லாமல் சில செல்போன் டவர்களை சாடி வந்த நிலையில், நம் வாழ்க்கை சூழல் மாறியதே சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என்று கூறுகின்றனர் சிட்டுக் குருவி ஆர்வலர்கள். 



இது தொடர்பாக பறவைகள் மருத்துவர் நிவேதிதா கூறுகையில், "சிட்டுக் குருவிகள் பெரும்பாலும் சந்தை போன்ற இடங்களிலேயே காணப்படுகின்றன. மனிதனுக்கும், இந்த பறவை இனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனிதன் அமைத்து வாழ்ந்த பாரம்பரிய வீடுகள் சிட்டு குருவிகளுக்கு வாழ்விடத்தைத் தந்தன. சந்தையில் சிதறிக்கிடக்கும் பொருட்கள் அவற்றிற்கு உணவாக அமைந்தது. தற்போது அவரை சூப்பர் மார்கெட் மற்றும் வணிக வளாகங்களின் கூரைகளுக்கு இடம் மாறியுள்ளன." என்றார்.

மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சூழல் அனுதினமும் மாறி வருவதே சிட்டுக் குருவிகளை மாயமாக்கி வருவதாகக் குற்றம் சாட்டுகிறார் சிட்டுக் குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன். இது குறித்து அவர் சிம்பிளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- 

முந்திய காலகட்டத்தில் நமது வீடுகளைச் சுற்றிலும் புதர்கள் மற்றும் காய்கறிச் செடிகளை வளர்த்து வந்தோம். அந்த செடிகளில் இருக்கும் காய்கறிகளும், பூச்சிகளும் சிட்டுக் குருவிகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. தயாரிக்கப்பட்ட, தற்போது நம் வீடுகளைச் சுற்றி புதர்கள் இல்லை. இதுவே, சிட்டுக் குருவிகள் நகரப் பகுதியை விட்டு சென்றதற்கான முக்கிய காரணம். தற்போது அதற்கான வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். 



சிட்டுக் குருவிகள் வாழத் தகுந்த வகையில் மரத்தால் தயாரிக்கப்பட்ட செயற்கையான கூடுகளை தயாரித்துள்ளோம். அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த கூடுகளை வீட்டின் முன் பகுதியில் பொருத்தி, அதில் உணவிடுவதன் மூலமாக மீண்டும் சிட்டுக் குருவிகளின் 'கீச்' சப்தத்தை நம்மால் கேட்டிட முடியும். 

சிங்காநல்லூர், வடவள்ளி போன்ற கோவையின் பல்வேறு பகுதிகளில் இந்த செயற்கைக் கூடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கூடுகளில் தற்போது சிட்டுக் குருவிகளின் வருகையை நம்மால் காண முடிகிறது. சிட்டுக் குருவிகளை காப்பாற்ற நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அவற்றிற்கான கூடுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். (தொலைபேசி எண் : 99438-50907‬)

இவ்வாறு அவர் கூறினார். 

செயற்கை கூடுகளை நம் வீட்டு வாசலில் அமைத்து, அவற்றிற்கான உணவையும் அளித்து மீண்டும் 'கீச்' சத்தம் கேட்டிடுவோமே..! 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...