கோவையில் பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை உட்பட பல்வேறு நகரங்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவை உட்பட பல்வேறு நகரங்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

கோவை வெள்ளலூர் கனகலட்சுமி நகரை சேர்ந்தவர் புருசோத்தமன். லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் காந்திபுரத்தில் உள்ள திருமண தகவல் மையத்தில் இரண்டாவது திருமணத்துக்காக பதிவு செய்திருந்தார். அப்போது பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த குமுதவள்ளி என்ற 45 வயது பெண்ணும் அந்த தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். 



திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த மோகன், வனஜா ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் புருஷோத்தமனுக்கும், குமுதவள்ளிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில், தொழிலை விரிவு படுத்துவதாகக் கூறிய புருசோத்தமன் வீட்டில் இருந்து ரூ.3 கோடி வரையில் கேட்டு, தனது மனைவி பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த குமுதவள்ளி வீட்டார் விசாரித்த போது அவருக்கு வேறு பல பெண்களுடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் காவல் நிலையத்தில் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (கிழக்கு) மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் புருசோத்தமன் மேலும் 7 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இரண்டாவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, வசதியான வீட்டு பெண்களை திருமணம் செய்ததாகவும், அதன் பின்னர் தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களை சொல்லி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சென்னை, கோவை நீதிமன்றங்களால் தண்டனை அளிக்கப்பட்டும், தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததால், மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை சிறைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...