திருநங்கைகளுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணை

அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை இரு திருநங்கைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை இரு திருநங்கைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

3-ம் பாலினத்தவரின் நலனிற்காக, 40 வயதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாக 3-ம் பாலினர் நலவாரியம் அமைத்தது, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 



அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வரும் எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகிய இரண்டு 3-ம் பாலினர்களும், தங்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பட்டம் படித்தும், வயது வரம்பைக் கடந்துவிட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நேர்வாக ஏற்றுக் கொண்டது. அவர்களை அரசு மருத்துவமனைகளில் முறையே நுட்புனர் நிலை-ll மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை -ll ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...