30 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வு இல்லை: குமுறலில் வனத்துறை தோட்ட காவலர்கள்

தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: தமிழக அரசின் சமூக வனத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் தோட்ட காவலர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறையில், சமூக வன பாதுகாப்பு காடுகளை உருவாக தொடங்கப்பட்ட இந்த துறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதில் சுமார் 512 மிகை பணி தோட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.



தரிசாக உள்ள மலைக் குன்றுகள் மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் அவரவர் இடங்களில் நாற்றுகளை வைத்து சமூக காடுகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இந்த துறை தொடங்கப்பட்டது முதல், இதுவரை தோட்ட காவலர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய நாற்றங்கால் பண்ணையில் வனம் சார்ந்த மர நாற்றுகளை வைத்து அதனை பாதுகாத்து, வனப்பகுதிகளிலும் பள்ளி கல்லூரி வளாகங்களில் நட இவர்கள் மேற்கொள்ளப்படும் பணி கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எங்கள் வாழ்வில் இன்னும் பசுமை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டும் தோட்ட காவலர்கள், பணி உயர்வுக்கான தமிழக அரசு ஆனை 46 வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் 200 பேருக்கு மட்டும் பணி உயர்வினை பெயரளவில் வழங்கிவிட்டு மீதமுள்ள 300 பேரை புறக்கணித்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தோட்ட காவலர்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் மாத வருமானம் ரூ.7 ஆயிரத்தைக் கூட தாண்டுவதில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பமே வறுமையுள்ளது.

இந்த சூழலில், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வை தமிழக அரசு விரைந்து வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...