மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் மாமனாரைக் குத்தி கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை : கோவையில் மாமனாரைக் குத்தி கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கோவை தாமுநகரை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் பழனிசாமி(39).இவர் கோவை அம்மன்குளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ்(75) மகள் மாரியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் பழனிசாமி பிரிந்து சென்று விட்டார். அதனால் தன்னுடைய 2 மகள்களுடன் தாய் வீட்டுக்கு மாரியம்மாள் வந்துவிட்டார். பிறகு பழனிசாமி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். 

மேலும், தன்னுடைய மகள்கள் இருவரையும் பார்ப்பதற்காக ஏரிமேட்டில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கு பழனிசாமி அடிக்கடி வருவார். பேத்திகளைப் பார்க்க விடாமல் மாமனார் செல்வராஜ் தடுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த 22.08.16 தேதி அன்று, மகள்களைப் பார்ப்பதற்காக பழனிசாமி வந்தார். அவரை வீட்டினுள் அனுமதிக்காமலும், பேத்திகளை பார்க்க விடாமல் செல்வராஜ் தடுத்தார். இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதில், பழனிசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி மாமனார் செல்வராஜை கொலை செய்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு கோவை 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் கொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது. இதில், பழனிசாமி மீதான கொலைக்குற்றம் நிருப்பிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் பழனிசாமி அடைக்கப்பட்டார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...