கோவை நீதிமன்றத்தில் மாவோயிஸ்டுகள் 5 பேர் ஆஜர்

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


கோவை : கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ்(40), அவரது மனைவி ஷைனி (35), அனூப் மேத்யூ(40), கண்ணன்(40), வீரமணி(42) ஆகியோரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். 

தேச துரோகம்,கூட்டுச்சதி, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருந்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து கோவை மத்திய சிறையில் 5 பேரையும் அடைத்தனர். பின்பு ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஷைனி, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ளனர். 

இவர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை, கோவை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். கோவை சிறையில் இருந்து சைனி,அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். 

நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நுழைந்த உடன், ‘பெரியார் சிலையை உடைக்கும் இந்து மத வெறியர்களை விரட்டி அடிப்போம். தமிழகத்திற்கு வந்த ராமராஜ்ய ரத யாத்திரையைத் துரத்தி அடிப்போம்..' என கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அனைவரும் நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ரூபேஷ், கண்ணன், வீரமணி ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கினை வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும்,அதே நீதிமன்றத்தில் ரூபேஷ், சைனி, அனூப் மீதான போலி சிம்கார்டு வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கினையும் வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பின்பு ரூபேஷ் கேரளாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். சைனி, அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...