பத்மஶ்ரீ நானம்மாளுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த கோவை ரோட்டரி சங்கத்தினர்

மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோவை : மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.



அவினாசி ரோட்டில் அமைந்துள்ள சேம்பர்ஸ் டவர் வளாகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் சாண்டியாகோ ஜேசு, செயலாளர் ஜ்யோதீஷ் பிள்ளை மற்றும் சிறப்பு வருந்தினர் K.S.பிள்ளை ஆகியோர் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பத்மஶ்ரீ நானம்மாளிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தன் குடும்பனத்தினரோடு கலந்துகொண்ட நானம்மாள், யோக கலையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.

அவர் பேசுகையில், 'யோக கலை, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். அனைவரும் யோகாசனங்கள் செய்து, நோயில்லாத வாழ்வை பெற வேண்டும். கீரை, கம்பு, சிறுதானியம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 99 வயதிலும் தளராமல், நான் யோகா செய்வதற்கு, இயற்கை சார்ந்த உணவு பழக்கவழக்கம் தான் காரணம்' என்று கூறினார்.

அத்தோடு, உடலுக்கு வலிமை தரும் சில முக்கியமான யோகாசனங்களையும் மேடையில் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய கோவை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சாண்டியாகோ ஜேசு, 'டில்லியில், குடியரசு தலைவர் கைகளால் பத்மஶ்ரீ விருது வாங்கிய பின், நானம்மாள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். கோவைக்கு பெருமை தேடிதந்த அவரை, ரோட்டரி சங்கம் சார்பாக முதலாவதாக கெளரவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...