மூடியே கிடக்கும் கிராமப்புற இ-சேவை மையங்கள்: சான்றிதழ்கள் பெற அவதிக்குள்ளாகும் கிராமமக்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இ-சேவை மையங்கள் மூடியே கிடப்பதால், சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், வருவாய் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், புதிய குடும்ப அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவுகள், நிலம் தொடர்பான சிட்டா, பட்டா அடங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழ்களைப் பெற நகர் பகுதியில் உள்ள வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்களின் சிரமங்களை போக்க, பல கோடி ரூபாய் செலவில் இ-சேவை மையங்கள் அரசு சார்பில் கட்டப்பட்டன.

3 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக் கட்டிடங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், எந்த அடிப்படை நோக்கத்தோடு இதுபோன்ற கிராமப்புற இ-சேவை துவக்கப்பட்டதோ, அதன் பயன்பாடு மக்களை சென்றடையவே இல்லை என பொதுமக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். வழக்கம் போல, அந்தந்த வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வேண்டி கிராமமக்கள் நாள் கணக்கில் அலைய வேண்டிய சூழலே நிலவி வருகிறது.

மேலும், ஆண்டு கணக்கில் மூடிக்கிடக்கும் இ-சேவை மையங்கள் பலவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், மதுக்கூடமாகவும் மாறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பயன்படுத்தப்படாத பொருட்களை கொட்டி வைக்கும் குப்பைக்கிடங்காவும் இந்த புதிய கட்டிடங்களை, ஊராட்சி நிர்வாகங்களே மாற்றியுள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி கிராமப்புற இ-சேவை மையக் கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...