தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, குற்றவாளிகளை விரைவில் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ், சுந்தரன், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு எதிரிகளைப் பல இடங்களில் தேடி கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், குற்ற வழக்கில் தொடர்புடைய கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஊட்டி வெல்பெக் எஸ்டேட் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (33) ஆகிய 2 பேரை கண்டுபிடித்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பிடிபட்ட இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தீவிர முயற்சி செய்து நேற்று இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவினை பெற்றார். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சார்வு செய்யப்பட்டது.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...