ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்., 16 வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது. 

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. எனவே, அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவுபடுத்தினர். ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கார்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் எனவும் பேசப்பட்டது. 

இதையடுத்து, தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. மேலும், கார்த்தியின் மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு மூன்று வார அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால பாதுகாப்பு எதுவும் வழங்கக்கூடாது என்றும் கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கார்த்திக்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...