பள்ளியை மீட்டுத் தரக்கோரி காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் தர்ணா

திருப்பூர்: திருப்பூர் காது கேளாதோர் பள்ளியை மீட்டுத் தரக்கோரியும், பள்ளி நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரியும் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நிர்வாகத்தை மாற்றுத்திறனாளியான முருகசாமி கவனித்து வருகிறார். 

இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி லட்ச கணக்கில் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களும், தற்போது பயின்று வரும் மாணவர்களும் என 200-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்களை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து பள்ளியை மீட்டு தர கோரியும், முருகசாமி மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் தரையில் அமர்ந்து மவுன மொழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...