உதகையில் சாலையோர பூங்காக்கள் பார்க்கிங் தளமாக மாறுமா?

உதகையில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சாலையோர பூங்காக்களை பார்க்கிங் தளமாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: உதகையில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சாலையோர பூங்காக்களை பார்க்கிங் தளமாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல், உதகை நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நகரை அழகு படுத்தும் விதமாக 5 இடங்களில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் அருகேயும், போஸ் திடல் அருகேயும் பூங்கா அமைக்க சுமார் ரூ. 2.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.



ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பூங்காக்கள் புதர் செடிகள் முளைத்தும், நாற்காலிகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. இந்த 5 பூங்காக்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து பூட்டியே காணப்படுகிறது.



தற்போது போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் உதகை நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ள நிலையில், பராமரிப்பு இல்லாத சாலையோர பூங்காக்களை அகற்ற வேண்டும் என்றும், மேலும் அவற்றை பார்க்கிங் தளமாக மாற்றினால் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதோடு, நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பயனடைவார்கள் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...