முன்னாள் ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு 3 ஆண்டு சிறை

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை: வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பீளமேடு பகுதியை அடுத்த ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார் (54). கடந்த 1989-ம் ஆண்டு வரை ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றினார். முறையாக பணிக்கு வராததால் கடந்த 1991-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கோவையைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து ரூ. 4 லட்சத்து 91ஆயிரத்து 200 மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 800 நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.

அரசு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குமார் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு மோசடி இவர் மீது தொடரப்பட்டு கோவை 6-வது மற்றும் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...