6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் விவசாய பூமிகள் நிறைந்த வேளாண் உற்பத்தி மையமாக இருந்து வருகிறது. இங்கு வாழைக்கு அடுத்தபடியாக காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விவசாயிகள் சார்பில் காய்கறிகளை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் வகையில் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.2 கோடி செலவில் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது. 

அதற்காக சிக்கதாசம்பாளையத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்காக 20-க்கும் மேற்பட்ட கடைகள், காய்கறிகள் கொட்டும் கொட்டகை, தரம் பிரிக்கும் மையம், 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. 

ஆனால், இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதனை பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அதன் உறுதித் தன்மை இழந்து வருவதுடன், கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடியும் நிலை ஏற்பட்டு வருகிறது.



கட்டிடம் கட்டப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமாக இருந்தாலும் அதற்கு வழித்தடம் இல்லாத காரணத்தால் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. தனியாரிடம் இருந்து வழித்தடத்தை வாங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட போதும், வருவாய்த் துறையினர் தனியார் இடத்திற்கு உரிய பணம் கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் இந்த கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...