ஆந்திராவின் ஆளுநராகிறாரா கிரண்பேடி..?

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி ஆளுநராகப் பதவி வகித்த நரசிம்மன், தெலுங்கானா, ஆந்திரா என இருமாநிலங்களாகப் பிரிந்த பின்னரும், சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்து இருமாநிலங்களின் பொது ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஆளுநர் நரசிம்மன் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்திலேயே இருப்பதால் தெலுங்கானா மாநிலத்துக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், ஆந்திராவை பாரபட்சத்துடன் நடத்துவதாகவும், ஆந்திராவுக்கு புதிய ஆளுநரை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்காக மத்திய அரசிற்கு கடிதத்தையும் ஆந்திர அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்திய பா.ஜ.க. அரசில் இருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சி சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த 2 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பா.ஜ.க., மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினர் இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆந்திர மாநிலத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதனை சந்திரபாபு நாயுடு பயன்படுத்தவில்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். இதைக் கண்டித்த சந்திரபாபு நாயுடு, அமித்ஷா பொய்களை கூறுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு புதிய ஆளுநராக தற்போது புதுச்சேரியின் ஆளுநராக இருக்கும் கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது, ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கிரண்பேடி திறம்பட சமாளிப்பார் என்று மத்திய அரசு கருதுகிறது. மேலும், புதுச்சேரியில் ஆளுநராக இருக்கும் கிரண்பேடிக்கும், புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையில் மோதல் போக்கும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், ஆந்திர மாநில ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...