மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தினர். 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு காட்டுயானை, காட்டுமாடு, மான் என அரியவகை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. இதனால், அவைகள் வனத்தை விட்டு நீர்நிலைகளை தேடி அழைந்து வருகின்றன. 

இந்நிலையில், இன்று சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மயில்மொக்கை என்ற பகுதியில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் தண்ணீர் தேடி வந்துள்ளது. அதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதியில் இன்று மாலை ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கால்நடை மருத்துவர் தியாகராஜன் மற்றும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, யானை உடல் சோர்ந்து கீழே விழுந்து மயங்கி பரிதாபமாக உயிரிழந்தது. 



யானையை பரிசோதித்த மருத்துவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, யானை உயிரிழந்ததை உடற்கூறு ஆய்வு மூலம் உறுதி செய்தனர். பின்னர், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. தற்போது, வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை அடர்ந்த வனத்தில் அமைப்பதை அதிகரிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...