காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தர்ணா..!

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமையா சையத். இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால், இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி பெனாசிர் பானு என்பவர் ரூ. 7 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெனாசிர் பானு மீது மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை அணுகியுள்ளார். அப்போது, இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர் ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்றதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சுமையா சையத் கூறியுள்ளார். 

மேலும், தற்போது வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், விபச்சார வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மோசடி செய்தவர் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பந்தயசாலை காவல் துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, சுமையா சையத் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...