"சிதிலமடைந்த மரங்கள் விழும் முன்னே அகற்றுங்கள்.!" : பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் சாலையோரம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிதிலமடைந்து விழும் தருவாயில் உள்ள மரங்களை அகற்ற கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை : கோவையில் சாலையோரம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிதிலமடைந்து விழும் தருவாயில் உள்ள மரங்களை அகற்ற கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவையில் சில பகுதிகளில் குறிப்பாக பாலசுந்தரம் சாலையில் உள்ள வாகை மரம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த மரம், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே போல் ஆர். எஸ்.புரம் அருகில் வெளிநாட்டு வகை மரம் உள்ளது. இதே போல் பல இடங்களில் மரங்களின் நிலையை அறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருதமலை அடிவரத்தில் 150 வயது மதிக்கதக்க ஆலமர கிளை ஓன்று இரவு நேரம் மக்கள் கூடும் இடத்தில் முறிந்து விழுந்தது. அந்த கிளையே பெரிய மரம் போல் இருந்தது. இரவு நேரம் என்பதால் மக்கள் அதிகம் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து இயற்கை ஆர்வலரான ஓசை சையத் கூறுகையில், "மரக்கன்றுகளை நற்று எவ்வாறு அதனை பாரமரிக்கின்றோமோ, அதே போல் மரங்களின் ஆயுள் காலம் முடியும் போது அதனை அகற்றுவதும் நம் கடமையே. மக்கள் மத்தியில் மரங்கள் மீதான தவறான எண்ணம் வந்துவிடக் கூடாது. மனிதனை சார்ந்தே மரங்களும் உள்ளன. உதாரணத்திற்கு தென்னை மரங்களின் கீழே நிற்கும் போது பெரும்பாலும் இளநீர், தேங்காய்கள் மற்றும் மட்டைகள் விழுவதில்லை. சற்று நகர்ந்து சென்றால் விழும் இதனை நானே உணர்ந்துள்ளேன். அரசு அதிகாரிகள் மரங்கள் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை அகற்ற வேண்டும்." என்றார்.

"சாலை விரிவாக்கம் போன்றவற்றால் ஏற்கனவே நிறைய மரங்களை இழந்துவிட்டோம் அங்கு சாலையோரம் புதிய மரங்கன்றுகளை நட வேண்டும். அதேபோல் சிதிலமடைந்த மரங்களை கண்டறிந்து அதனை அகற்றி அங்கேயும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்." என்று சமூக ஆர்வலர் அருள்ராஜ் தெரிவித்தார்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விழும் தருவாயில் உள்ள மரங்கள் குறித்து கண்காணித்து வருகிறோம். பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், விரைவில் சிதிலமடைந்த மரங்கள் அகற்றப்படும்." என்றார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...