காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் : பிரபலங்களின் கருத்துக்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை பின்வருமாறு,  

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான  தீர்வாக இருக்க முடியும். காவிரி விவகாரத்தில் நீதி கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன். என்றார்.

துரைமுருகன் (தி.மு.க.,): காவிரி விவகாரத்தில் கடைசி நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி என்ன ஆகப்போகிறது..? இவ்வாறு கூறினார்.  

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் : காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். என்றார்.  

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் : கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். எனத் தெரிவித்தார். 

குமார், அருண்மொழித்தேவன் (அ.தி.மு.க., எம்.பி.க்கள்) : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம். இவ்வாறு கூறினர்.

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் : காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். என்றார். 

கவிஞர் வைரமுத்து : உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறினார்.  

பழ. நெடுமாறன் : தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தருவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் : ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கேடு. எனக் குறிப்பிட்டார்.  

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது. கண்காணிப்புக்குழு வேண்டுமானால் அமைக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு மத்திய பா.ஜ.க., அரசுதான். என்றார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...