ரூ. 20 லட்சம் மதிப்பிலான இலவச கழிப்பறைகளை பயனாளிகளுக்கு வழங்கிய மார்ட்டின் அறக்கட்டளை

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா பகுதியாக துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளை மாற்றும் நடவடிக்கையாக மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன. கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப்பின் உதவியுடன் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.



இந்த நிலையில், இந்த இலவச கழிப்பறைகளை 165 பயனாளிகளுக்கு மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஏழை, எளியவர்களுக்கு இலவச கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது தனது கணவரின் நீண்ட நாள் கனவு. இதற்காக, அவர் ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், தற்போது, ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகளை கட்ட நிதியளித்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்," என்றார். 

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...