பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிப்பு

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு எதிராக எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு எதிராக எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அனைத்து ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும், அடிக்கடி பயணச்சீட்டு பரிசோதனைகள் நடத்தி வருகிறது. கடந்த (2017-18) ஆண்டில், சேலம் கோட்ட முதுநிலை வணிகமேலாளர் ஏ. விஜுவின், சேலம் கோட்ட வணிக மேலாளர் கே. மாது இருவரது மேற்பார்வையில், பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு 38,205 பரிசோதனைகள் நடத்தி, 2,11,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 8,95,52,095/- அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகையாக வசூலித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 4 சதவீதம் அதிகமாகும். 

ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை பயணச்சீட்டு இல்லாத பயணம் செய்தோர் எண்ணிக்கை (Nos.) 46,662. அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ. 1,91,33,011.00 வசூலிக்கப்பட்டுள்ளது.

சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் எண்ணிக்கை (Nos.) 1,57,852 (குறைந்த வகுப்பு பயணச்சீட்டு வைத்துக் கொண்டு, உயர் வகுப்பில் பயணிப்பது, பயணச்சீட்டில் உள்ள ரயில்நிலையத்தை விட வேறு ரயில்நிலையங்களுக்குப் பயணிப்பது போன்றவை) அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ .6,74,53,829. முன்பதிவு செய்யாமல் சுமைகளை எடுத்துச் சென்று அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சுமைகளை எடுத்துச் சென்றவர்கள் எண்ணிக்கை (Nos.) 7,198, அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ. 29,65,255 ஆகும். 

இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆர், சந்திரசேகரன், பி.எஸ்.பத்மகுமார், பி. செல்வகுமார், ஆர், சந்திரன், எஸ். பாரதி ஆகியோருக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் ஒவ்வொருவருக்கும், பாராட்டுச் சான்றிதழுடன், ரூ. 1000 ரொக்கப்பரிசையும் வழங்கினார்," என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...