சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் சங்கனூர் பள்ளம் : நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

கோவை : பிளாஸ்டிக் கழிவுகளாலும், சாக்கடை கழிவுகளாலும் கோவை சங்கனூர் பள்ளத்தின் பல பகுதிகள் இன்று சுகாதார சீர்கேட்டின் உச்சமாக திகழ்கிறது.

கோவை : பிளாஸ்டிக் கழிவுகளாலும், சாக்கடை கழிவுகளாலும் கோவை சங்கனூர் பள்ளத்தின் பல பகுதிகள் இன்று சுகாதார சீர்கேட்டின் உச்சமாக திகழ்கிறது.



கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் பகுதியில் உருவாகி கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், ரத்தனபுரி என ஓடி இறுதியில் சிங்காநல்லூர் சென்றடைகிறது சங்கனூர் பள்ளம். மழை நீரை பிரதானமாக கொண்டு கால்வாயாக பயணிப்பதே இதன் பிரதான நோக்கம். ஆனால், சாக்கடை கழிவுகளால் இன்று சங்கனூர் பள்ளம் முழுவதுமாக சாக்கடை பள்ளமாக மாறியுள்ளது.

சாக்கடை கழிவுகளால் மட்டும் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிளாஸ்டிக் கழிவுகளால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேடாகவும் சங்கனூர் பள்ளம் மாறியுள்ளது. குறிப்பாக, ஏழாம் நம்பர் பாலம், கிருஷ்ண சாமி நகர், வசந்த் நகர், ரத்தினபுரி புதுப்பாலம், கவுண்டம்பாளையம் மெயின் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களும், வணிகர்களும், பிளாஸ்டிக், கோழிக்கழிவு, சாப்பாடு மீதம் உள்ளிட்ட கழிவுகளை நேரடியாகக் கொட்டி வருகிறார்கள்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் தனியார் அலுவலகம் செல்லும் இளைஞர் பிரபாகரன் கூறுகையில், "சாக்கடை கழிவுகளால் தூர்நாற்றும் வீசி வந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், கொசு உற்பத்தியாகி பகல் நேரங்களில் கூட கடிக்கிறது. மழை காலங்களில் கிருமிகள் பரவவும் வாய்ப்புள்ளது" என்றார்.



"கோவை மாநகராட்சி சார்பாக அவ்வப்போது தூர்வாரி வந்தாலும், தற்போது தூர்வாராமல் குப்பைகளும், செடிகளும் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது" என சமூக ஆர்வலர் வை.குப்புராஜ் தெரிவித்தார்.

இது குறித்து கோவை மாநகராட்சி சுகாதார துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

மழை காலங்களில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், கோடை காலத்திலேயே சங்கனூர் பள்ளத்தில் கழிவுகள் அகற்றப்பட்டு சுகாதாரமான சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...