கோவையில் அதிகாரிகள் சோதனை : 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காந்திபுரம், உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 48 கிலோ அடியுள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பழ மார்க்கெட்







இதே போல், உக்கடம் பழ மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உபயோகிக்க முடியாத நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த 2.5 டன் ஆரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவையில் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...