தீ விபத்தின் போது 'செல்பி' எடுக்காதீர்கள்., அது உயிருக்கே ஆபத்தாக முடியும்..! - தீயணைப்புத் துறை

கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.

செல்பி

செல்பி மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் எங்கும் செல்பி, எதிலும் செல்பி என்ற நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா தளங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதே போல் சாலை விபத்து, தீ விபத்து ஏற்படும் பகுதிகளிலும் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பிரதிப்குமார் கூறுகையில், "தீ விபத்தின் போது அதன் அருகில் செல்வதோ அல்லது செல்பி எடுக்க முயல்வதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலிண்டர் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் இருந்தால் அது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்போது வேடிக்கை பார்ப்பவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்." என்றார்.

தீ விபத்தின் போது அதனை அணைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் தோறும் தீயணைப்பு வீரர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்தும், மக்கள் அந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளிப்பார்கள்.

இது குறித்து பிரதிப்குமார் கூறுகையில், "மாதம் தோறும் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் அல்லது கிராமப்புறங்களில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம். போதுவாக கோடை கலங்களில் தீ விபத்து குறித்து அதிக அழைப்புகள் வரும் ஆனால், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு அழைப்புகள் குறைவே. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...