சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இரு திருமண மண்டபங்களை தனியார் அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், திருக்கோயில் வசம் திருமண மண்டபங்களை ஒப்படைக்கத் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள மண்டபத்தின் சாவிகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்காமல் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...