இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.


கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 



கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார், சுப்பிரமணியபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலணி பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு விசாரணைகள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர்,சுபேர் ஆகியோரின் இல்லங்களில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில், சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதிகாலை 3 மணி முதல் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில், சுகுணாபுரம் ஹைதர் அலி, பிலால் எஸ்டேட் ஹநீஸ், வெள்ளக்கிணறு முகமது அலி, துடியலூர் சதாம், செல்வபுரம் ஃப்பெபின் ரகுமான் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் செல்போன்கள், மெம்மரி கார்டுகள் போன்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதேபோல, ஹநீஸ் என்பவரது பட்டறையிலும் சோதனை செய்து வருகின்றனர். இதில், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் மறைக்கபட்டிருந்ததால், அது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில், ஃப்பெபின் ரகுமான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ., மேல் புகார் அளித்தார். இந்த நிலையில் இவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Video: Laxman

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...