செல்வசிந்தாமணி குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: வீடுகளுக்குள் புகுந்தது தண்ணீர்..!

கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.


கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கோடை வெயில் அதிகரித்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தனன் குளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகிய 5 குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.



இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரம் பகுதியிலுள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி குளத்தின் ஷட்டர்களை திறந்து விட்டனர். மேலும், செல்வபுரம் பகுதியிலிருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயில் உள்ள அடைப்பினை அதிகாரிகள் சரி செய்தனர்.



இதனால், கால்வாயை ஒட்டி அமைந்துள்ள அசோக் நகர் மற்றும் சேத்துமா வாய்க்கால் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பிவரும் நிலையில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தண்ணீரை திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததுள்ளது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததே, இது போன்ற நிலை ஏற்படக் காரணம்." என்று குற்றம் சாட்டினர்.

Video: Laxman

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...