எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் : சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  



சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன 8-வது மாநில மாநாடு கோவையில் மே 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மூன்று. மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சி.ஐ.டி.யு., மாவட்ட (பொ) செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மாநாடு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும், அண்டை நாடுகளில் விற்பனை செய்வது போல குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும். சமீபத்தில் உயர்த்தியுள்ள எரிபொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை பெருநகரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ் கருவியுடன் பிரிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது. உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...