ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை செலுத்த நிர்பந்திப்பதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

கோவை : ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை கட்டசொல்லி நிர்பந்தப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை : ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை கட்டசொல்லி நிர்பந்தப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறியதாவது :- கல்வி உரிமை சட்டத்தை பாதுகாக்கக் கண்காணிப்பு குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும். 

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு தொடர்பான தகவல்களை பதாகைகள் மூலம் வெளியிட வேண்டும். அரசு பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது மாநில அரசின் கடமையாகும். அத்தொகையை செலுத்துமாறு மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பது ஏற்கக்கூடியதல்ல. 

இந்தக் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், அரசும் நிறைவேற்றாத பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டம் முன்னெடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...