கோவையில் விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்தவருக்கு அபராதம்

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் முதன் முறையாக கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த மரம் ஒன்றின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "நேற்று மாலை 'மே-பிளவர்' என்ற 20 வயது மதிக்கத்தக்க மரம் லாரி மோதி விழுந்தது. இது குறித்து நீதிமன்ற வளாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த லாரி ஓட்டுனரை பிடித்தனர். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்த அதிகாரிகள், எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? என்பதை இன்று தெரிவிக்கவுள்ளனர்.

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்த அதிகாரிகள் முதன் முறையாக விபத்து மூலம் மரத்தை சாய்த்தவருக்கு அபராதம் விதிக்கின்றனர்." என்றார். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...