கோவையில் விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்தவருக்கு அபராதம்

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் முதன் முறையாக கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த மரம் ஒன்றின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "நேற்று மாலை 'மே-பிளவர்' என்ற 20 வயது மதிக்கத்தக்க மரம் லாரி மோதி விழுந்தது. இது குறித்து நீதிமன்ற வளாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த லாரி ஓட்டுனரை பிடித்தனர். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்த அதிகாரிகள், எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? என்பதை இன்று தெரிவிக்கவுள்ளனர்.

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்த அதிகாரிகள் முதன் முறையாக விபத்து மூலம் மரத்தை சாய்த்தவருக்கு அபராதம் விதிக்கின்றனர்." என்றார். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...