மாவட்ட ரீதியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் 3-வது இடம்: ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்புக்கான தேர்வெழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3 இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,114 மாணவர்களும், 13,466 மாணவிகளும் உள்பட மொத்தம் 24,580 பேர் தேர்வெழுதினர். இதில், 10,530 மாணவர்கள், 13, 110 மாணவிகள் உள்பட மொத்தம் 23,640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் என சராசரியாக 96.18% ஆகும். கடந்த ஆண்டு பெறப்பட்ட 96.05 % காட்டிலும், 0.13 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 93.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக தேர்வெழுதி தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

மேலும், தேர்வு முடிவுகளை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இருந்த நிலையில், தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் ஒருமணி நேரத்திற்கு பிறகே அறிவித்தது செய்தியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...