'கனா' பட இயக்குநரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து '3' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக தற்போது வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், தயாரிக்க இருக்கும் முதல் படத்துக்கு ’கனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கபாலியின் ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடிய அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜா, சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக நினைக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் தந்தை என்ற கதைக்கருவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் தந்தையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் மகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதைக்கண்ட நடிகர் விஜய் படத்தின் இயக்குநரை பாராட்டியுள்ளார். விஜயின் வாழ்த்து தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...