குண்டும், குழியுமான மேட்டுப்பாளையம் மலைக்கிராம சாலைகள்: மருத்துவ அவசரத்திற்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளியங்காடு என்னும் இடத்தில் இருந்து பில்லூர் அணை அமைந்துள்ள பரளிக்காடு வரை செல்லும் சாலையில் பூச்சமரத்தூர், தோண்டை, வேப்பமரத்தூர், வீரக்கல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சுமார் 60 கி.மீ. நீளமுள்ள இச்சாலையின் வழியே நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் சென்றடையலாம். எனவே, உள்ளூர் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி சுற்றுலா செல்வோர் மற்றும் இதர வர்த்தக பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன.



இதேபோல, தோலம்பாளையம் பகுதியில் இருந்து கோப்பனாரி வரை மலைக்கிராமங்கள் வழியே செல்லும் சுமார் 40 கி.மீ., தொலைவுள்ள சாலை வழியே கேரள மாநிலத்திற்கு செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து மிகுந்தே காணப்படுகிறது. ஆனால், இச்சாலைகள் முழுவதுமாக பழுதடைந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் கடந்து செல்லவே இயலாத வகையில் காணப்படுகின்றன. அடர்ந்த மலைக்காட்டின் வழியே செல்லும் இச்சாலையில் சென்றால் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடும் அல்லது விபத்துக்கள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கல்வி பயில செல்லும் கிராம மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவது மட்டுமின்றி, அவசர மருத்துவ தேவைகளுக்காக கூட இச்சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் சார்பில் பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, “இச்சாலையினை புதுப்பிக்க வனத்துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்காததின் காரணமாகவே சாலை சீரமைப்பு பணிகள் தாமதமாகிறது” எனக் கூறினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைக்கிராமங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் பயணிக்கவே இயலாத வகையில் பழுதடைந்து, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை செப்பனிடப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...