தேனீகளை வளர்த்து வருமானத்தை உயர்த்துங்கள்..!

கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது.


கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது. 



ஆண்டுதோறும் மே மாதம் 19-ம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் இன்று மற்றும் நாளை தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. 



இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு, தேனீ பெட்டிகள், வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் தேன் கொண்டு தயாரித்து பல்வேறு உணவுப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். 



இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய தலைவர் ராமராஜு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனீகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. 



தேனீகள் இல்லாத ஒரு உலகத்தை நாம் கற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் தேனீகளை வளர்க்கலாம். இது கூடுதலாக லாபத்தை அளிப்பதோடு, விளைச்சலையும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் பல்கலை., சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்." என்றார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...