நூற்றாண்டு காலத்தின் உச்சம் ; கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை

கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோடை மழையின் தாக்கத்தால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரங்கள், செடிகள் என அனைத்து வகை தாவரங்களும் பச்சை பசேல் எனக் காட்சியளிக்கிறது. காட்டு தீ என சொல்லக்கூடிய பேராபத்திலிருந்தும் மேற்குதொடர்ச்சி மலை தப்பியது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் கோடை மழை 130 மி.மீ எதிர்பார்த்த நிலையில், 285 மி.மீ மழை தற்போது வரை பெய்துள்ளது. கோடை காலம் இன்னும் முடியவில்லை, எனவே மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நூற்றாண்டு கால வரலாற்றில் ஒர் உச்சம்.

பொதுவாக மே மாதம் அக்னி வெயிலில் 66 மி.மீ., மழை மட்டுமே பெய்யும். ஆனால், இந்தாண்டு மே மாதம் மட்டும் 232 மி.மீ மழை பெய்துள்ளது. 2015-ம் ஆண்டு கோடை மழை 260 மி.மீ பதிவாகியிருந்தது. அதன்பின், 2018-ம் ஆண்டு தற்போது வரை 285 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழக அறிவுரைப்படி, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது வைத்திருந்ததால் அவர்களுக்கு மண் வளம் அதிகரித்துள்ளது.



மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மரம், செடி, கொடி என அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கோடை காலத்தில் வரும் வழக்கமான பிரச்சினையான காட்டு தீ மற்றும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் பிரச்சினை மழை நீரினால் குறைந்துள்ளது. கோவையைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக 36.5 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 4 முதல் 5 கி.மீ வேகம் வரை வீசி வருகிறது, இது அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.

"மழை நீரை வீணாக்காமல் கால்வாய்கள் தூர்வார வேண்டும். சாலையின் ஓரம் உள்ள பகுதிகளில் நீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாக்கடைகள் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். மரக்கிளைகள் மழையில் விழாமல் இருக்க அதனைத் தடுக்க வேண்டும், கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர் அருள் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...